Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுப்பிக்கப்பட்ட குளம் திறப்பு

Print PDF

தினமலர்           13.12.2010

புதுப்பிக்கப்பட்ட குளம் திறப்பு

பம்மல்: புதுப்பிக்கப்பட்ட பம்மல், சூரியம்மன் கோவில் குளம், திருப்பனந்தாள் ஏரி ஆகியவற்றை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். பம்மல் நகராட்சி பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் திருப்பனந்தாள் ஏரி, சூரியம்மன் கோவில் குளம் ஆகியவை 2.3 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது. சுற்றுலாத் துறையுடன் இணைந்து நகராட்சி இந்த நீர்நிலைகளின் கரையை பலப்படுத்தி, சாலை, மின்விளக்கு அமைத்து அழகுபடுத்தியுள்ளது. இதை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி, நகராட்சி தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் இதற்கான விழாவில் கலந்து கொண்டனர். சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், பம்மல் நகராட்சியில் 1.52 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் நேற்று அடிக்கல் நாட்டினார்.