Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுவாணி அணை நீர் மட்டம் சரிந்தது : 110 நாளுக்கு மட்டுமே குடிநீர் : சமாளிக்க மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்       13.01.2011

சிறுவாணி அணை நீர் மட்டம் சரிந்தது : 110 நாளுக்கு மட்டுமே குடிநீர் : சமாளிக்க மாநகராட்சி நடவடிக்கை

கோவை, ஜன. 13:

சிறுவாணி அணை நீர் மட்டம் 4.95 மீட்டர் சரிந்தது. இன்னும் 110 நாளுக்கு மட்டுமே குடிநீர் பெற முடியும்.

சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்டம் 15 மீட்டர். நேற்று அணையின் நீர் மட்டம், உச்ச மட்டத்திலிருந்து 4.95 மீட்டர் குறைந்து காணப்பட்டது.

அதாவது அணையின் நீர் மட்டம் 873.55 மீட்டராக (கடல் மட்ட உயர கணக்கின் படி) இருந்தது. இன்னும் 10.05 மீட்டர் உயரத்திற்கு நீர் தேக்கம் உள்ளது.

தினமும் நீர் மட்டம் 10 முதல் 11 செ.மீ அளவிற்கு குறைந்து வருகிறது. 10 முதல் 13 நாளில் 1 மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் குறைகிறது. தினமும் 8.8 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

இதில் கோவை மாநகராட்சிக்கு 7.3 கோடி லிட்டர் குடிநீரும், நகராட்சிகள், வழியோர கிராமங்களுக்கு 1.5 கோடி லிட்டர் குடிநீரும் வழங்கப்படுகிறது.

சிறுவாணி நீரை, சுமார் 20 லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போதுள்ள நீர் மட்ட அளவின் படி பார்த்தால் இன்னும் 110 நாளுக்கு மட்டுமே குடிநீர் பெற முடியும்.

அதாவது ஏப்ரல் மாத இறுதி வரை மட்டுமே குடி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. மே மாதம் அணை வறண்டு விடும். அணை நீர் அளவை குறைத்தாலும் மே மாதம் முதல் வாரத்தில் குடிநீர் பற்றாக்குறை மிக அதிகமாகவே இருக்கும்.

சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பெய்யவில்லை.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் 30 முதல் 70 மி.மீ அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் கோடை வெயிலில் இந்த மழையால் நீர் மட்டம் உயராது.

எனவே அணை வறட்சி யை தவிர்க்கும் வாய்ப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை காலத்தில் 1800.76 மி.மீ மழை பதிவானது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் 671.77 மி.மீ மழை பதிவாகியிருந்தது. கடந்த 2009ம் ஆண்டு, இரு பருவ காலத்திலும் 3100 மி.மீ மழை பெய்தது.

இதனுடன் ஒப்பிடும் போது மழையளவு ஒரு ஆண் டில் 35 சதவீதம் குறைவு. அணை நீர் மட்டம் வேக மாக சரிவதால் சிறு வாணி நீராதார பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலையிருக்கிறது.

விரைவில் சிறுவாணி அணை விவகாரம் தொ டர்பாக குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப் புகளின் ஆலோ சனை கூட்டம் நடத்தப்படும்.

இதில் குடிநீர் கட்டுபாடு, விநியோகம் குறித்த புதிய நடைமுறை உத்தரவு பிறப்பிக்கப்படும்.