Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க மீட்டர் அமைப்பு

Print PDF

தினகரன்        28.01.2011

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க மீட்டர் அமைப்பு

சிவகாசி, ஜன. 28:

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில், கசிவுகள் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க மீட்டர் அமைக்கப்பட உள்ளது.

சிவகாசி நகரின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மானு£ர் கூட்டுக்குடிநீர் திட்டம் 2006ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. நெல்லை மாவட் டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பழையாற்றில் இருந்து குழாய்கள் மூலம் திருவேங்கடம், வெம்பக்கோட்டை, சித்துராஜபுரம் வழியாக சிவகாசி நகரில் தாமிரபரணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நாள்ஒன்றுக்கு 60 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தினசரி 30 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

சிவகாசி நகரில் 5 நாட்களுக்கு ஒருமுறை என, சுழற்சி அடிப்படையில், அனைத்து பகுதிகளுக்கும், குடிநீர் விநியோகம் நடக்கிறது. இத்திட்டம் மூலம் சிவகாசி பகுதியில் உள்ள சுமார் 61 வழியோர கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக, மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. சிவகாசிக்கு விநியோகிக்கப்படும், தண்ணீர் அளவும் குறைகிறது.

இதனை தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு குடிநீர் வாரியம், நெல்லை மாவட்டத்தில், தாமிரபரணி தண்ணீர் சப்ளையாகும் பகுதிகளை கணக்கீட்டு, அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்து கசிவுகளை கண்டறியும் சடா மீட்டர் களை பொருத்தியுள்ளது. இந்த மீட்டர்கள் மூலம் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் கண்டறியப்படும். மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில், சிவகாசி நகருக்கு தங்குதடையின்றி, தாமிரபரணி குடிநீர் கிடைக்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் குடிநீர் பெற முடிவு

சிவகாசி நகராட்சியின், குடிநீர் ஆதாரமான வெம்பக்கோட்டை அணை விளங்கி வருகிறது. சிவகாசி நகரின் குடிநீர் தேவையை கருதி, அணையில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, 2 மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. வெம்பக்கோட்டை அணையில் இருந்து, சிவகாசி நகராட்சிக்கு தற்போது தினமும், 19 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சரிவர மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லை. கடந்தாண்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தும், வெம்பக்கோட்டை பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லை. தற்போது அணை வறண்டு காணப்படுகிறது.

சிவகாசி நகரின், குடிநீர் தேவை அதிகரிப்பால், வெம்பக்கோட்டை அணையில், மேலும் ஒரு மின்மோட்டாரை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கூடுதல் தண்ணீர் எடுக்க முடியும். அடுத்த 2 மாதங்களில் கோடை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இப்போதே, கூடுதல் குடிநீர் பெற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.