தினமலர் 26.07.2012
குடிநீர் குழாய் பதிக்கும் பணி : மேயர் விஜிலா துவக்கினார்
திருநெல்வேலி : தச்சநல்லூர் 4வது வார்டு உடையார்பட்டியில் குடிநீர் திட்ட பிரதான குழாய் பதிக்கும் பணியை மேயர் விஜிலா துவக்கிவைத்தார்.நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 4வது வார்டு உடையார்பட்டி, திலக் நகர் குடிநீர் திட்டத்திற்காக பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் 7.80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.மேயர் விஜிலா தலைமை வகித்து, புதிய திட்டப்பணிகளை துவக்கிவைத்தார். துணைமேயர் ஜெகநாதன், மண்டல தலைவர் மாதவன், உதவிக் கமிஷனர் ஜான் சுந்தர்ராஜ், உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், இளநிலைப்பொறியாளர் பைஜூ, கவுன்சிலர் வேல்ராஜ், வட்ட செயலாளர் ஆறுமுகம், பேச்சாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.