Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி பெரம்பலூர் கலெக்டர் அதிரடி ஆய்வு

Print PDF

தினமலர்                 27.07.2012

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி பெரம்பலூர் கலெக்டர் அதிரடி ஆய்வு

 பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் தரேஷ்அஹமது திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 57 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 306 கிராமங்கள் மற்றும் அரும்பவூர், பூலாம்பாடி ஆகிய டவுன் பஞ்சாயத்து பகுதிகளும், இத்திட்டத்தின் மூலம் பயனடையும்.செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறுஞ்சும் நிலையத்திலிருந்து இத்திட்டத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான பணிகள் பாடாலூர் பகுதி வரை முடிவுற்று குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மீதமுள்ள பகுதிகளுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான நீர் உந்தும் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிவுற்றுள்ளன. பெரியம்மாபாளையம், அரும்பாவூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்உந்தும் நிலையங்களையும், பாடாலூர், நாரணமங்கலம், தெரணி ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் குறித்தும் கலெக்டர் தரேஷ்அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அலுவலர்களிடம் இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்தி 306 கிராமங்களுக்கும் விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.முன்னதாக ரூ.156 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள வேப்பந்தட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடம் கட்டும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, கூட்டுக்குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் சந்திரசேகரன், உதவி நிர்வாக பொறியாளர்கள் விஜயராகவன், கனகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.