தினகரன் 03.08.2012
மாநகரின் குடிநீர் திட்டம் ஜப்பான் நிதிக்குழு ஆய்வு
திருச்சி, : திருச்சி மாநகரில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற் காக ரூ.221 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இப்பணிகளை ஆய்வு நடத்த ஜப் பான் நிதி நிறுவன திட்ட நிபுணர் நக்கமுரா, முது நிலை திட்ட வளர்ச்சி நிபு ணர் மிகிர், தமிழ்நாடு நகர்ப் புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் முது நிலை உதவி துணை தலை வர் ராஜேந்திரன், துணை மேலாளர் ஆரோன் ஜஸ் டின் ஆகியோர் நேற்று திருச்சி வந்தனர். பின்னர் குடமுருட்டி அருகே பிர தான குழாய்களை இணை க்கும் பணி, கொள்ளிடம் ஆற்றில் ராட்சத குடிநீர் சேகரிப்பு கிணறுகள், சஞ்சீவிநகர், விறகுப்பேட்டை ஆகியவற்றில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அருகில் இருந்தார்.