Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் திட்ட பணிக்காக தயாராகும் "ஏர்வால்வ் சேம்பர்'

Print PDF

தினமலர்                    08.08.2012

குடிநீர் திட்ட பணிக்காக தயாராகும் "ஏர்வால்வ் சேம்பர்'

பாலக்கோடு: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக பாலக்கோட்டில் ஏர்வால்வ் சேம்பர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகள், 17 டவுன் பஞ்சாயத்துக்கள், ஆறு ஆயிரத்து 755 பஞ்சாயத்துக்கள் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், ஆயிரத்து 928 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பில் திட்ட பணிகள் துவங்கப்பட்டு ஐந்து தொகுப்பாக பணிகள் நடந்து வருகிறது.ஐந்தாவது தொகுப்பில் பாலக்கோட்டில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி நடக்கிறது. இதற்காக பாலக்கோட்டில், 78 லட்சம் கொள்ளவு கொண்ட நீர் ஏற்று மையம் அமைக்கும் பணி வேகாமாக செயல்படுத்தப்படுகிறது.மேலும் இங்கிருந்து செல்லும் குடி நீர் குழாய்களில் ஏற்படும் நீரின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஏர்வால்வ் சேம்பர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக பாலக்கோட்டில் ஏர்வால்வ் சேம்பர் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இதை வாகனங்கள் மூலம் ஏற்றி சென்று குடிநீர் குழாய்களில் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து கூட்டு குடிநீர் திட்ட அலுவர் ஒருவர் கூறியது:

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதின் ஐந்தாவது தொகுப்பில் மடத்தில் இருந்து பாலக்கோட்டில் அமைக்கப்பட்டு வரும் 78 லட்சம் கொள்ளவு கொண்ட நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.

இங்கிருந்து   கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக குடிநீர்   குழாய்கள்   பதிக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.குடி குழாயின் நீர் அழுத்தத்தை குறைக்க நூற்றுக்கும் மேற்பட்ட ஏர்வால்வ் சேம்பர் பொருத்தப்படுகிறது.இதற்காக பாலக்கோடு நீர் ஏற்று மையம் அருகே ஏர்வால்வ் சேம்பர் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணிகள்     அனைத்தும்  வரும்   செப்டம்பர்  மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.