Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையா? இன்று புகார் கூறலாம்

Print PDF

தினகரன்     11.08.2012

குடிநீர் பிரச்னையா? இன்று புகார் கூறலாம்

சென்னை, : குடிநீர் மற்றும் கரூவுநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க திறந்த வெளி கூட்டம் இன்று காலை பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அபூர்வ வர்மா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
 
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெறும் திறந்தவெளி கூட்டம், இன்று காலை 10 மணி முதல் முதல் பிற்பகல் 1 மணி வரை, குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கரூவுநீர் தொடர்பாணைகள் மற்றும் குடிநீர், கரூவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் குறித்த சந்தேகங்களை மனுக்கள் வாயிலாக விண்ணப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
 
ஒவ்வொரு பகுதி அலுவலக கூட்டமும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 57 மனுக்கள் பெறப்பட்டு, 52 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அபூர்வ வர்மா கூறியுள்ளார்.