Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் திட்டத்தில் 1.80 கி.மீ தூரத்துக்கு இரும்பு குடிநீர் குழாய்

Print PDF

தினகரன்             13.08.2012

பில்லூர் திட்டத்தில் 1.80 கி.மீ தூரத்துக்கு இரும்பு குடிநீர் குழாய்

கோவை,: பில்லூர் முதல் திட்டத்தில் ரூ.4.90 கோடியில் 1.80 கி.மீ தூரம் இரும்பு குடிநீர் குழாய் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தின் மூலமாக கோவை மாநகராட்சி, பல்லடம் நகராட்சி, மதுக்கரை, செட்டிபாளையம், வெள்ளலூர், ஒத்தக்கால் மண்டபம் உள்பட 23 பேரூராட்சி, 510 வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு தினமும் 6.5 கோடி லிட்டர் குடிநீரும், நகராட்சி, பேரூராட்சிகள், வழியோர கிராமங்களுக்கு தினமும் 6.1 கோடி லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்படுகிறது. தினமும் சுமார் 17 லட்சம் மக்கள் பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெறுகிறார்கள். பில்லூர் அணையில் இருந்து வெள்ளிங்காடு, தோலம்பாளையம், காரமடை, வையம்பாளையம், வீரபாண்டி பிரிவு, வெள்ளமடை வழியாக 28 கி.மீ தூரம் கற்காரை பிரதான குழாய் (1500 மி.மீ விட்டம் கொண்டது) மூலமாக விளாங்குறிச்சி ரோடு மேல் நிலை நீர் தொட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பிரதான குடிநீர் குழாய் பாறை, பள்ளம், களிமண் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. குழாய் கற்காரையாக (பி.எஸ்.சி) இருப்பதாலும், அதிக அழுத்தம், மின் தடை காரணமாகவும் அடிக்கடி உடைந்து விடுகிறது. குழாய் உடைப்பு, அதிக நீர் அழுத்தம் கண்டறிய ஸ்கேடா என்ற குடிநீர் விநியோக கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டது. இந்த கருவியின் மூலமாக களிமண் பூமியில் பதிக்கப்பட்ட கற்காரை குழாய்களே அதிக அழுத்தம் தாங்காமல் உடைந்து விடுவதை தெளிவாக காட்டியது. இதை தொடர்ந்து களிமண் பூமியில் உள்ள பிரதான குழாய்களை முற்றிலும் மாற்ற உத்தரவிடப்பட்டது. வீரபாண்டி பிரிவு முதல் வெள்ளமடை வரை 1.8 கி.மீ தூரத்திற்கு கற்காரை குழாய்க்கு பதிலாக இரும்பு குழாய் அமைக்கப்படும். இதற்காக 4.90 கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது.வரும் 16ம் தேதி வரை டெண்டர் விண்ணப்பங்கள் பெறப்படும். வரும் 17ம் தேதி கோவை பாரதிபார்க் ரோட்டில்  உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் டெண்டர்.