தினகரன் 17.08.2012
14 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அதிகாரி தகவல்
துறையூர், : துறையூர் நகராட்சி பகுதி யில் 14 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப் பட்டு வருகின்றன என ஆணையர் மதிவாணன் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், நகராட்சி பொது நிதி ரூ.22 லட்சம் செலவில் 1, 2, 3, 6, 7, 8, 9, 12, 16, 18, உள்ளிட்ட 14 வார்டுகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. காவிரி கூட்டு குடிநீர் சீராக விநியோகிக்க குடிநீர் வடிகால் வாரியம் 125 கேவி ஜெனரேட்டரை நகராட்சி வளாகத்தில் பொருத்தியுள்ளது. துறையூரில் தினமும் காசிகுளம், பெரிய ஏரி ஆழ்குழாய் கிணறு மூலம் நீர் எடுக்கப்பட்டு 19 லட்சம் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது.
காவிரி குடிநீர் 20 லட்சம் லிட்டர் பெறப் பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் சப்ளையாகும் என்றார்.