Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குழாய் இணைப்பு பணி ஆதம்பாக்கம், நங்கநல்லூரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து போன் செய்தால் லாரியில் விநியோகம்

Print PDF

தினகரன்      23.08.2012

குழாய் இணைப்பு பணி ஆதம்பாக்கம், நங்கநல்லூரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து போன் செய்தால் லாரியில் விநியோகம்

சென்னை,: சென்னை மெட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணிக்காக குடிநீர் செல்லும் பிரதான குழாய்கள் இணைப்பு பணி நாளை நடக்கிறது எனவே இப்பகுதியில் குடிநீர் சப்ளை இருக்காது, அவசர தேவைக்கு போன் செய்தால் லாரியில் விநியோகம் செய்யப்படும் என்று குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிக்காக மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலையின் அடியில் செல்லும் 600 மி.மீ மற்றும் 450 மி.மீ விட்டமுள்ள இரும்பு குழாயை மாற்றி அதை ஏற்கனவே உள்ள 600 மி.மீ மற்றும் 450 மி.மீ விட்டமுள்ள இரும்புக்குழாயுடன் இணைக்கும் பணி, நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலந்தூர், ஆதம்பாக்கம், பாலாஜி நகர், பக்தவச்சலம் நகர், நங்கநல்லூர், கே.கே.நகர், கன்டோன்மென்ட், மீனம்பாக்கம், பம்மல், முனவர் அவென்யூ, கண்ணபிரான் கோயில் தெரு, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

அவசர தேவைக்கு லாரிகளில் குடிநீர் தேவைப்படுவோர், பகுதி பொறியாளர் 12 என்பவரை 8144930912 என்ற தொலைபேசி எண்ணிலும், துணைப்பகுதி பொறியாளர் -12 என்பவரை 81449 30262, உதவிப்பொறியாளர் ஆலந்தூர்- 8144930364, உதவிப்பொறியாளர் லாரி விநியோகம்- 8144930165, தலைமை அலுவலகம் (புகார்பிரிவு) - 2845 4040 மற்றும் 45674567 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.