Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.9 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டம்

Print PDF

தினமலர்              24.08.2012

ரூ.9 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டம்

பொள்ளாச்சி:பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கிணற்று நீர் வினியோகிக்க ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, சூளேஸ்வரன்பட்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி கவுன்சில் கூட்டம் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நடந்த விவாதம் :செல்வகுமார் (தி.மு.க.,): மின்தடை குறித்து மக்கள் தெரிவிக்கும் புகார், பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்வது போல், மின்வாரிய அலுவலகத்திலும் பதிவேட்டை கையாள வலியுறுத்த வேண்டும்.அதிகாரிகள்: இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும்.

அஜிமா (அ.தி.மு.க.,): பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கிணற்று நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தினசரி பயன்பாட்டு தண்ணீர் கிடைக்காத மக்கள் இந்த நீரை பயன்படுத்த முடியும். அதிகாரிகள்: குடியிருப்பு பகுதிகளில், கிணற்றுநீருக்கான குழாய் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பழுதடைந்த தார் சாலையும் சீரமைக்கப்படும்.கனகராஜ் (தி.மு.க.,) : மயானபகுதியில், குப்பை அகற்றாததால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் : ஒவ்வொரு பகுதியாக, குப்பை அகற்றி தூர்வாருவதுடன், மின் விளக்குகள் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.காளிதாஸ் (சுயேச்சை): ஏறுபதிநகர் பகுதியில், பொது கிணற்றுக்கு மோட்டார் வைத்து மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன் (தலைவர்): பேரூராட்சிக்குட்பட்ட 8,9வது வார்டு பகுதிகளில், கிணற்று நீர் வினியோகிக்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மோதிராபுரம், சக்தி நகர், கல்லாமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன் பெறுவர். இதற்கேற்ப குடியிருப்பு பகுதிகளில், குழாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி சார்பில் இத்திட்டத்துக்கு ஒன்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள்: மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில், செயலர் அலுவலர் உமாராணி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.