Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை சிக்கனம்: உடன்குடி பேரூராட்சித் தலைவி வேண்டுகோள்

Print PDF

தினமணி            24.08.2012

குடிநீரை சிக்கனம்: உடன்குடி பேரூராட்சித் தலைவி வேண்டுகோள்

உடன்குடி, ஆக. 23: தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் உடன்குடி மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும், அதனால் மக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்துமாறு உடன்குடி பேரூராட்சித் தலைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து உடன்குடி பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் வெளியிட்ட அறிக்கை:

பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் உடன்குடி-சாத்தான்குளம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வரும் குடிநீரின் அளவு மிகக் குறைவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.