Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகரில் இன்று குடிநீர் சப்ளை ரத்து

Print PDF
தினகரன்      04.09.2012

திருச்சி மாநகரில் இன்று குடிநீர் சப்ளை ரத்து

திருச்சி, : திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. எனவே குடிநீர் நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் மரக்கடை, விறகுபேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்சன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம், காஜாமலை காலனி, அரியமங்கலம், மேலகல்கண்டார்கோட்டை. பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, சுப்பிரமணியபுரம், ஏர்போர்ட், செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், அன்புநகர், ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், எல்ஐசி காலனி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், விஸ்வாஸ் நகர், ஆனந்த் நகர், சுப்பிரமணிய நகர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை முதல் வழக்கம்போல் விநியோகிக்கப்படும். இவ்வாறு கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.