Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி குடிநீர்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

Print PDF
தினமணி              07.03.2013

ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி குடிநீர்:  நகர்மன்றத் தலைவர் ஆய்வு

ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வர ஆதாரமாக முக்கூடல் பகுதியில் சோதனை கிணறு அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார் நகர்மன்றத் தலைவர் எஸ். தனலட்சுமி.

 ராஜபளையம் நகரில் உள்ள 42வார்டுகளுக்கும் தேவையான குடிநீர் ராஜபாளையம் முடங்கியார் சாலையிலுள்ள 6வது மைல் குடிநீர்த் தேக்கத்தில் இருந்து விநியோகம் செய்யப்டுகிறது. இதுதவிர வனப்பகுதியில் இருந்து ரூ. 22 கோடி மதிப்பீட்டில் 2ஆவது குடிநீர்த்தேக்கம் அமைக்கப்படு அங்கிருந்து இந்நகருக்கு குடிநீர் விநியோகிக்க நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் வறட்சிகாலங்களில் வனப்பகுதியில் இருந்து நீர் கிடைப்பது இல்லை. இதனால் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடாக தாமிரபரணி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கு ராஜபாளையம்

 நகர்மன்றத்தலைவி பி.எஸ்.தனலட்சுமி தீர்மானம் கொண்டுவந்து நிரைவேற்றினார். இத்திட்ட ஆய்வுக்காக ரூ. 2லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அரியநாயகியபுரம் தடுப்பணைப்பகுதியில் இருந்து ராஜபாளையத்துக்கு தாமிரபரணி ஆற்று நீர் கொண்டுவர பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக இப்பகுதியில் சோதனை கிணறுகள் அமைக்கும் பணி நடந்துவருகிரது.

 இப்பணியை ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி, துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா கவுன்சிலர்கள் மணிகண்டராஜா, முருகேசன், ரமணி, ராஜம், தனலட்சுமி, ராஜபாளையம் நகர அ.தி.மு.க இலக்கிய அணிச்செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி அர்ச்சுணராஜா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.