Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க 40 இடத்தில் செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர்

Print PDF
தினகரன்          23.03.2013

நகரில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க 40 இடத்தில் செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய, 40 இடங்களில் செல்போன் மோட்டார் ஸ்டார்டர் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் உள்ள குடி யிருப்பு மற்றும் வணிகவளாகங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேவையான குடிநீர், அம்பராம்பாளையம் கூட்டுகுடிநீர் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.

அம்பராம்பாளையத்தில் உள்ள தலைமை நீரேற்றுநிலையத்தில் இருந்து பிரதான குழாய் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் நகரில் மகாலிங்கபுரம், ஜோதிநகர், டி.கோட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு பின் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது.

மேலும் நகரில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்தும், தெருக்களில் உள்ள பொதுக்குழாய் வழியாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.  தற்போது மின்தடை மற்றும் கோடை வறட்சிகாரணமாக 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சில நேரங்களில், குடிநீர் மோட்டார் முறையாக இயக்கப்படாமல் இருப்பதால் குடியிருப்பு பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.  

இதைதொடர்ந்து மின்மோட்டாரை விரைந்து இயக்கி, குடிநீர் வினியோகத்தை சீர் படுத்துவதற்காக நகராட்சி மூலம் செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர் மூலம், தங்குதடையின்றி குடிநீர் வினியோக சேவை இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,  பொதுமக்களுக்கு சீராக தண்ணீர் வினியோகம் செய்யும் வகையில், அம்பராம்பாளையம் நீரேற்று நிலையம், மார்க்கெட்ரோடு நீரூந்து நிலையம் மற்றும் நகரில் உள்ள 16, பொதுக்கிணறுகள், 14போர்வோல் பகுதிகளில் செல்போன் மூலம் இயக்ககூடிய மோட்டார் ஸ்டார்ட்டர் விரைவில் அமைக்கப்படுகிறது. ரூ.5லட்சத்தில் மொத்தம் 40 இடங்களில் பொருத்தப்பட உள்ளன.

இதன் மூலம் மின்சார கட்டணம் மிகவும் குறையும், நீண்டதூர பயணம் மிச்சமாகும், இருக்கின்ற இடத்தில் இருந்து, செல்போன் மிஸ்டுகால் மூலம் மோட்டாரை ஆன் மற்றும் ஆப் செய்யலாம். சிறப்பு மைக்ரோ கன்ட்ரோலர் மூலம் மோட்டாருக்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. மின்நிறுத்தம் மற்றும் வினியோக நேரத்தில்  செல்போனுக்கு உடனே தகவல் கிடைக்கிறது. மேலும் அதன் செயல்பாட்டை கம்யூட்டரில் தெரிந்து கொள்ளலாம். விரைவில் செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர் அமைக்கப்படுகிறது‘ என்றனர்.