Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடலூரில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF
தினமணி          24.03.2013

கடலூரில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து


கடலூர் நகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் நகர் மன்ற ஆணையர் (பொறுப்பு) ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூர் திருவந்திபுரம், கேப்பர்மலையில் உள்ள தலைமை குடிநீரேற்று நிலையங்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின்மோட்டார் இயக்கி குடிநீர் உந்துதல் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் பெறும் திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், புதுப்பாளையம், அண்ணாநகர் மற்றும் கடலூர் துறைமுகம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.