தினமணி 01.04.2013
வீரப்பன்சத்திரம் பகுதியில் நாளைமுதல் இரு நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஏப்ரல் 2, 3) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் ஞாயிற் றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு மாநகராட்சி வீரப்பன்சத்திரம் 16-ஆம் நம்பர் பஸ் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்படும் பணிக்கு இடையூறாக உள்ள குழாய், மாற்றி அமைக்கப்பட உள்ளதால் 35 முதல் 40 வரையும், 46, 47 மற்றும் 49-ஆவது வார்டுகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
வீரப்பன்சத்திரம் பகுதியில் நாளைமுதல் இரு நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஏப்ரல் 2, 3) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் ஞாயிற் றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு மாநகராட்சி வீரப்பன்சத்திரம் 16-ஆம் நம்பர் பஸ் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்படும் பணிக்கு இடையூறாக உள்ள குழாய், மாற்றி அமைக்கப்பட உள்ளதால் 35 முதல் 40 வரையும், 46, 47 மற்றும் 49-ஆவது வார்டுகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.