Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் புதிய மின் மோட்டார்கள்

Print PDF
தினமணி       03.04.2013

அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் புதிய மின் மோட்டார்கள்


பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய ரூ.50 லட்சம் செலவில் அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் மூன்று மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளில் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் திட்டத்தின் மூலமாக அம்பராம்பாளையம் பகுதி வழியாகச் செல்லும் ஆழியாற்றில் இருந்து தினமும் 13 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆழியாற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள 220 குதிரைத் திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் மூலமாக பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் உள்ள நீருந்து நிலையத்திற்கு தண்ணீரைக் கொண்டு சென்று, அங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறது.

தலைமை நீரேற்று நிலையத்தில் இரண்டு மின் மோட்டார்களும் பழுதடையும் நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்திற்கு மூன்று புதிய மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, நகராட்சித் தலைவர் வி.கிருஷ்ணகுமார் கூறியது:

பொள்ளாச்சி நகராட்சிப் பகுதிக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் விதமாக ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 60, 75 மற்றும் 100 குதிரைத் திறன்கள் கொண்ட மூன்று புதிய மின் மோட்டார்கள் அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இப் புதிய மின் மோட்டார்கள் பொருத்துவதன் மூலமாக 15 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.