Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தங்கசாலை சந்திப்பில் மேம்பால பணி குழாய் மாற்றி அமைக்கும் பணியால் நாளை குடிநீர் வழங்குவதில் தடை போன் செய்தால் லாரியில் சப்ளை

Print PDF

தினகரன்                  03.04.2013

தங்கசாலை சந்திப்பில் மேம்பால பணி குழாய் மாற்றி அமைக்கும் பணியால் நாளை குடிநீர் வழங்குவதில் தடை போன் செய்தால் லாரியில் சப்ளை


சென்னை: தங்கசாலை சந்திப்பில் மேம்பால பணிக்காக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்படுவதால் நாளை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் வழங்குவது தடைபடும் என்று குடிநீர்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தங்கசாலை சந்திப்பில் மாநகராட்சி சார்பாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை, பழைய குடிநீர் குழாயுடன் இணைக் கும் பணி நாளை காலை 10 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் மாலை 3 மணி வரை நடக்கிறது. எனவே அந்த சமயத்தில், ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, தங்கசாலை மற்றும் பகுதி-4ல் அமைந்துள்ள கோட்டங்கள் 42, 43, 47, 48 பகுதி -5 ல் அமைந்துள்ள கோட்டங்கள் 49, 50, 51, 52, 53, 54, 55 மற்றும் பகுதி-6 ல் அமைந்துள்ள கோட்டங்கள் 73 மற்றும் 77 ஆகிய இடங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும்.

எனவே அப்பகுதி மக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம். மேலும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பகுதி பொறியாளர்4- 8144930904, பகுதி பொறியாளர்5- 8144930905, பகுதி பொறியாளர்6- 81449- 30906, துணை பகுதி பொறி யாளர்11- 8144930211, துணை பகுதி பொறியாளர் 13- 8144930213 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.