தினமலர் 03.04.2013
குடிநீர் பிரச்னையை தீர்க்க 33 வார்டுகளில் ஆழ் துளை கிணறு
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 41 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாயில், 33 வார்டுகளிலும் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி பகுதிக்கு, 58 கி.மீ., தூரத்தில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, சின்னாறு அணையில் நீரின்றி வறண்ட நிலையில் இருப்பதால், எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், நகரப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரப்பகுதியில் பல இடங்களில் உள்ள ஆழ்துளை பம்புகளிலும் நிலத்தடி நீர் மட்டம் இல்லாமல், தண்ணீர் இன்றி பம்புகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தர்மபுரி நகராட்சி பகுதியில், 33 வார்டுகளிலும், 41 லட்சத்து, 58 ஆயிரம் மதிப்பில் ஆழ் துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் நீரேற்று நிலையத்தில் கேலஸி வகை கொண்ட ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் பம்பிங் செய்யவும் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலா ஆறு லட்ச ரூபாய் மதிப்பில், 36 லட்சத்தில், ஆறு ஆழ்துளை கிணறு அமைக்கவும் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் ஆழ் துளை கிணறுகள் அமைக்கும் போது, நீர் செறிவு அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து, அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க 33 வார்டுகளில் ஆழ் துளை கிணறு
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 41 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாயில், 33 வார்டுகளிலும் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி பகுதிக்கு, 58 கி.மீ., தூரத்தில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, சின்னாறு அணையில் நீரின்றி வறண்ட நிலையில் இருப்பதால், எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், நகரப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரப்பகுதியில் பல இடங்களில் உள்ள ஆழ்துளை பம்புகளிலும் நிலத்தடி நீர் மட்டம் இல்லாமல், தண்ணீர் இன்றி பம்புகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தர்மபுரி நகராட்சி பகுதியில், 33 வார்டுகளிலும், 41 லட்சத்து, 58 ஆயிரம் மதிப்பில் ஆழ் துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் நீரேற்று நிலையத்தில் கேலஸி வகை கொண்ட ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் பம்பிங் செய்யவும் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலா ஆறு லட்ச ரூபாய் மதிப்பில், 36 லட்சத்தில், ஆறு ஆழ்துளை கிணறு அமைக்கவும் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் ஆழ் துளை கிணறுகள் அமைக்கும் போது, நீர் செறிவு அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து, அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.