Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ3.59 கோடியில் திட்டப்பணி ரூ1.18 கோடியில் 5 ஜெனரேட்டர்

Print PDF
தினகரன்       04.04.2013

கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ3.59 கோடியில் திட்டப்பணி ரூ1.18 கோடியில் 5 ஜெனரேட்டர்


திருச்சி: கோடை காலம் துவங்கிவிட்டநிலை யில் குடிநீர் தேவையை சமாளிக்க திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ. 3.59 கோடியில் பணிகள் நடக்கிறது. குறிப்பாக மின்தட்டுப்பாட்டு நேரத்தில் தடையின்றி குடிநீர் தர ரூ. 1.18 கோடியில் 5 ஜெனரேட்டர்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் கோடையில் தட்டுப்பாடி ன்றி குடிநீர் வழங்க முதல் வர் ரூ. 3.59 கோடியை வறட்சி நிவாரணத் திட்டத் தில் ஒதுக்கீடு செய்துள் ளார்.

இதன் மூலம் கம்பரசம்பேட்டை தலைமை நீரே ற்று நிலையத்தில் 60 அடி ஆழத்தில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளும், புதிதாக மின்மோட்டார் மற்றும் மின் கேபிள் ஒயர்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இவற்றை மேயர் ஜெயா நேற்று பார்வையிட்டார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மாநகராட்சியின் பல் வேறு பகுதிகளில் தலா ரூ. 40 ஆயிரம் மதிப்ப¤ல் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் கைப்பம்புகள் பொருத்தும் பணி நட ந்து வருகிறது. குடிநீர்பற்றாக்குறை உள்ள 50 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி வைத்து லாரிகள் மூலம் குடிநீர் தரப்படும்.

மின்தட்டுப்பாடு ஏற் படும் நேரங்களில் தடை யின்றி குடிநீர் தர 5 புதிய ஜெனரேட்டர்கள் ரூ. 1.18 கோடியில் வாங்கப்பட உள் ளது.

மாநகரில் மாநகராட்சி யின் 11 லாரிகள் மூலமும் 4 வாடகை லாரிகள் மூலமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வறட்சியான காலத்திலும் 92 மில்லியன் லிட்டர் குடிநீர் தட்டுப்பாடின்றி நாள் தோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நவீன கழிப்பிடம்: தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நவீன கழிப்பிடம் அமைக்கப்படுவதையும் மேயர் ஆய்வு செய்தார்.

திருச்சி அம்மா மண்ட பம்-வீரேஸ்வரம் சாலை சந்திப்பில் காவிரி ஆற்றில் சம்மர் பீச்சுக்கு செல்லும் வழ¤யில் இப்புதிய கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கழிவறை 24 மணி நேரமும் பராமரிக்கப்பட உள்ளது. திருச்சி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் 2015க்குள் திறந்த வெளி கழிப்பிடங்களை முழுமையாக தடுக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இக்கழிப்பி டம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் போது கோட்டத்தலைவர் கள் லதா, சீனிவாசன், ஞானசேகரன், மாநகராட்சி செயற்பொறியாளர் சந்தி ரன், உதவி ஆணையர் ரங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.