Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய குடிநீர் இணைப்பு வழங்க திருப்பூர் மாநகராட்சி ஆயத்தம்

Print PDF
தினமணி       07.04.2013

புதிய குடிநீர் இணைப்பு வழங்க திருப்பூர் மாநகராட்சி ஆயத்தம்


திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 4-ஆவது மண்டலப் பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை செலுத்தியவர்கள், இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

திருப்பூர் மாநகராட்சி, 4-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் பகுதிகளில் புதிதாக குடிநீர் இணைப்புப் பெற வைப்புத் தொகை செலுத்தியவர்கள் அதற்கான ரசீது, 2013-14 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி (கட்டடத்துக்கு) செலுத்திய ரசீது நகலுடன் 15 ஆம் தேதிக்குள் 4-ஆவது மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

ஏற்கனவே வைப்புத்தொகை செலுத்தப்பட்ட தேதி அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துணை விதிகளின்படி, கூடுதல் வைப்புத் தொகை செலுத்துவோருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார்.