Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்:நகராட்சி ஆணையர் அறிவிப்பு

Print PDF
தினமணி        11.04.2013

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்:நகராட்சி ஆணையர் அறிவிப்பு


அரியலூர் மாவட்டம் நகராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்ப்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக இத்திட்டத்தில் இருந்து போதிய குடிநீர் கிடைக்காததால் ஆழ்குழாய் கிணற்றின் மூலம்தான் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் குடிநீர் இணைப்பில் இருந்து நேரடியாக மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுத்தால் மோட்டார் பரிமுதல் செய்யப்பட்டு நிரந்தரமாக அணைப்பு துண்டிக்கப்படும். குடிநீர் இணைப்பில் நகராட்சி அனுமதி இல்லாமல் எவ்வித பணியும் செய்யக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் நகராட்சி ஆணையர் பரமசிவம் அறிவித்தார்.