Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊட்டியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க நகராட்சி s.13.50 லட்சம் ஒதுக்கியது

Print PDF
தினகரன்        27.04.2013

ஊட்டியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க நகராட்சி s.13.50 லட்சம் ஒதுக்கியது


ஊட்டி:ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.13.30 லட்சத்தை நகராட்சி ஒதுக்கியுள்ளது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோயர் அணைகள், கோடப்மந்து அப்பர் மற்றும் லோயர் அணைகள், ஓல்டு ஊட்டி, கிளன்ராக் போன்ற அணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஊட்டி நகர் பகுதி மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய முக்கிய ஆதாரமாக பார்ச்ன்ஸ்வேலி அணை உள்ளது. இந்த அ¬ ண மின்வாரியத்திற்கு சொந்தமானது. இந்த அணையில் உள்ள நீரைக் கொண்டு குந்தா மின்வாரியம் மின் உற்பத்தி செய்து வருகிறது.

மேலும் இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்கு தேவையான தண்ணீர் நாள் தோறும் எடுக்கப்படுகிறது. இது தவிர ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகர £ட்சி நிர்வாகம் பார்சன் ஸ்வேலி அணையில் இரு ராட்சத மோட்டார் களை பொறுத்தி அணையில் இருந்து தண்ணீர் எடுத்து, அதனை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில் மின் உற்பத்திக்காக நாள் தோறும் இந்த அணையில் இருந்து மின் வாரியம் தண்ணீர் எடுத்து வரும் நிலையில் தற்போது அணையில் உள்ள நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே செல்கிறது. இதே போல் மற்ற அணைகளிலும் தண்ணீர் குறைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது நகரின் பல பகுதிகளில் 5 நாளுக்கு ஒரு முறையே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யாமல் உள்ளதால் அடுத்த மாதம் ஊட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து புற நகர் பகுதிகளில் மழை பெய்த போதி லும் அணைகள் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் உள்ளது. இதன £ல் அணைகள் முற்றிலும் வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக அடுத்த மாதம் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான தண்ணீர் வினியோகம் செ ய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் கோடையில் ஏற்படும் தண்ணீர் பிரச் னையை களைய தற்போது ஊட்டி நகராட்சி நிர்வாகம் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் தண்ணீர் பிரச்னையை போக்க முடிவு செய்துள்ளது. மேலும் 15 ராட்சத குடிநீர் தொட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் லாரி தண்ணீரை நிரப்பி தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு வினியோகிக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது.இத்திட்டம் மூலம் ஊட்டி நகரில் ஏற்பட்டு வரும் தண்ணீர் பிரச்னையை ஓரளவு களைய முடியும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.