Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் இன்று குடிநீர் ரத்து

Print PDF
தினகரன்        26.04.2013

மாநகரில் இன்று குடிநீர் ரத்து

திருச்சி: திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொன்மலை குடிநீர் திட்டப்பணியில் அடங்கும் சஞ்சீவ் நகர் பகுதியில் புதிய ஊன்று குழாய் இணைக்கும் பணி நடக்கிறது. எனவே அரியமங்கலம், மலைப்பாநகர், ரயில்நகர், ஜெகநாதபுரம், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேலக்கல்கண் டார் கோட்டை, விவேகானந்தர் நகர், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, மத்திய சிறை சாலை பகுதி, சுந்தர்ராஜ் நகர், சங்கிலியாண்டபுரம், காமராஜ் நகர், காஜாமலை, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், அன்புநகர், கல்லுக்குழி, செங்குளம் காலனி போன்ற பகுதிகளில் இன்று (26ம் தேதி) ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. நாளை (27ம் தேதி)  வழக்கம் போல் குடிநீர் விநியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.