தினகரன் 21.05.2013
சுரண்டை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு போக்க ரூ.50 லட்சத்தில் புதிய கிணறு
சுரண்டை, : சுரண்டை பேரூராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னை தீர புதிய கிணறு வெட்டும் பணி நடக்கிறது.
சுரண்டை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு போக்க ரூ.50 லட்சத்தில் புதிய கிணறு
சுரண்டை, : சுரண்டை பேரூராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னை தீர புதிய கிணறு வெட்டும் பணி நடக்கிறது.
சுரண்டை பேரூராட்சி பகுதியான சுரண்டை, கீழச்சுரண்டை, மேலச்சுரண்டை, ஆனைகுளம், குருங்காவனம், சிவகுருநாதபுரம், வரகுணராமபுரம் உட்பட 18 வார்டுகள் உள் ளன. இப்பகுதி பொதுமக்களுக்கு கடையநல்லூர் தாமிரபரணி குடிநீர் திட்டம், வாசுதேவநல்லூர் குடிநீர் திட்டம், சுரண்டை அனுமன்நதி குடிநீர் திட் டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கோடை மழை மற்றும் பருவமழை சரிவர பெய்யவில்லை. அத னால் விவசாய பணிகள் முடங்கி கிடக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவை யான அளவுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை.
இந்நிலையில் சுரண்டை பேரூராட்சி தலைவர் ஜெயராணி வள்ளிமுருகன் கலெக்டர் சமயமூர்த்தியிடம் மனு அளித்தார். அதனை பரிசீலித்த கலெக் டர் குடிநீர் பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் சுரண்டை பெரியகுளத்தில் புதிய திறந்தவெளி கிணறு வெட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேலை விரைவில் முடிந்தவுடன் உடனே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் அதன் மூலம் சுரண்டை பகுதியில் குடிநீர் பிரச்னை தீரும் என பேரூராட்சி தலைவர் ஜெயராணி வள்ளிமுருகள் தெரிவித்தார். துணைத்தலைவர் பழனி, செயல் அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் உடன் இருந்தனர்.