Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்ய அணையில் 20 அடி நீள குழாய் பொருத்தம்

Print PDF
தினமலர்       22.05.2013

சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்ய அணையில் 20 அடி நீள குழாய் பொருத்தம்


மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 20 அடியாக குறைந்ததால், சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, அணைக்குள் கூடுதல் நீளமுள்ள குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை உட்பகுதியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம், சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அணை நீர்மட்டம், 100 அடிக்கு மேல் இருக்கும் போது நாள் ஒன்றுக்கு, 2.40 கோடி லிட்டர் குடிநீரும், 50 அடிக்குமேல் இருக்கும் போது, 2.20 கோடி லிட்டர் குடிநீரும் எடுக்கப்பட்டு, சேலம் மாநகராட்சிக்கு வினியோகம் செய்யப்படும்.

நீர்மட்டம், கடந்த டிசம்பர், 19ம் தேதி, 35 அடியாக குறைந்ததால், நீரேற்று நிலையத்தின் தொட்டிக்கும் கீழே நீர்மட்டம் சென்று விட்டது. இதனால், சேலம் மாநகராட்சி நிர்வாகம், அணை நீருக்குள் இரு மிதவை மோட்டார் வைத்து, ஐந்தடி நீள குழாய்கள் பொருத்தி தண்ணீர் உறிஞ்சி, நீரேற்று நிலையத்தின் தொட்டியில் நிரப்பி, அங்கிருந்து பம்பிங் செய்து குடிநீர் சேலம் மாநகராட்சிக்கு வினியோகம் செய்தது.

நான்கு மாதத்துக்கு பின், தற்போது அணை நீர்மட்டம், 20 அடியாக குறைந்து விட்டது. நீரேற்று நிலைய தொட்டிக்கும், நீர் தேக்கத்துக்கும் இடையிலான இடைவெளி, 15 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர்தேக்கத்தில் இருந்து தொட்டிக்கு, 20 அடி நீளமுள்ள குழாய்கள் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

நீர்மட்டம் மேலும் குறையும் பட்சத்தில், மீண்டும் குழாய்கள் நீளத்தை மாற்றியமைத்து குடிநீர் எடுக்க, வேண்டிய நிலை ஏற்படும், என மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.