Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மின்தடை எதிரொலி மாநகரில் இன்று குடிநீர் சப்ளை ரத்து

Print PDF
தினகரன்       04.06.2013

மின்தடை எதிரொலி மாநகரில் இன்று குடிநீர் சப்ளை ரத்து


திருச்சி, : மின்தடையால் இன்று குடிநீர் விநியோகம் இருக் காது என மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்கு உட் பட்ட கம்பரசம்பேட்டை, பெரி யார் நகர் நீரேற்று நிலையங்கள், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. எனவே மரக்கடை, விறகுபேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் நீர் சேகரிப்பு கிணறு பகுதியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப் படும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாபேட்டை, கன்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கநகர், கருமண்டபம் மற் றும் காஜாமலை காலனி.

ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கேநகர், எல்ஐசி காலனி, விசுவநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், விசு வாஸ் நகர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர் ஆகியவற்றில் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் தடை அமலில் இருக்கும். எனவே மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

வழக்கம்போல் நாளை (5ம் தேதி) முதல் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.