Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தகவல்: சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை வழக்கம்போல நடைபெறும் 8–ந்தேதி முதல் நடைபெற இருந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

Print PDF
தினத்தந்தி               06.06.2013

சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தகவல்: சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை வழக்கம்போல நடைபெறும் 8–ந்தேதி முதல் நடைபெற இருந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்


சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டதால் 8–ந்தேதி முதல் செய்ய இருந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றதாகவும், வழக்கம்போல லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

குடிநீர் சப்ளை

சென்னை நகரில் குடிநீர் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னை குடிநீர் வாரியம் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பேசி அந்த லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது டீசல் விலை உயர்ந்துவிட்டதால் இந்த லாரிகளுக்கு வாடகை கட்டணத்தை உயர்தக்கோரி குடிநீர் சப்ளை செய்யும் லாரிகள் 8–ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரிகள் சங்கம் முடிவு செய்திருந்தது.இது குறித்து நேற்று சென்னை குடிநீர்வாரிய தலைமை பொறியாளரிடம் கேட்டதற்கு அவர் அளித்தபதில் வருமாறு:–

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னையில் 360 லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த லாரிகள் சென்னை குடிநீர் ஏற்றும் நிலையங்களில் இருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டு சென்னை நகரில் உள்ள தெருக்களுக்கு சென்று தேவையான இடங்களில் சப்ளை செய்து வருகின்றன.இந்த லாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் வாடகையை விட அதிகரித்து லாரி உரிமையாளர்கள் கேட்டிருந்தனர். லாரி உரிமையாளர்களும், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளும் கடந்த 3–ந்தேதி பேசினார்கள்.பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. வாடகை கட்டணத்தை உயர்த்த சென்னை குடிநீர் வாரியம் ஒப்புக்கொண்டது.

வேலை நிறுத்தம் வாபஸ்

அதன்படி அவர்கள் 8–ந்தேதி முதல் ஈடுபட இருந்த வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். அதனால் வழக்கம்போல சென்னையில் லாரிகள் குடிநீர் சப்ளை செய்யும். வேலை நிறுத்தம் எதுவும் இல்லை. வேலைநிறுத்தம் இல்லை என்று லாரி உரிமையாளர்களும் அறிக்கை விடுவார்கள்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.