Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை இன்று நிறுத்தம்

Print PDF
தினத்தந்தி         06.06.2013

சேலம் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை இன்று நிறுத்தம்


சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மேட்டூர்–நங்கவள்ளி குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிப்பு பணிகள் இன்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி இன்று(6–ந்தேதி) ஒரு நாள் மட்டும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு ஆணையாளர் எம்.அசோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.