தினமணி 07.06.2013
நாளை குடிநீர் வாரிய குறைதீர்க் கூட்டம்
குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 8) குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் நடைபெற உள்ளது.
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்தி:
ஜூன் 8-ஆம் தேதி இம்மாதத்திற்கான குறைதீர்க் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த தங்களின் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, மாயவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 26 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 22 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை குடிநீர் வாரிய குறைதீர்க் கூட்டம்
குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீர்ப்புக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 8) குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் நடைபெற உள்ளது.
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்தி:
ஜூன் 8-ஆம் தேதி இம்மாதத்திற்கான குறைதீர்க் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த தங்களின் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம்.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, மாயவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 26 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 22 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.