Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்

Print PDF
தினமணி                12.06.2013

2 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்


மதுரை மாநகராட்சி பகுதிகளில் பிரதான குடிநீர் குழாய்களில் மராமத்துப்பணி மேற்கொள்ள இருப்பதால், ஜூன் 13-ம் தேதி முதல் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும், என மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 மாநகராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் பூவம்பட்டி மேல்நிலைத் தொட்டி, கண்ணாப்பட்டி, அக்கரைப்பேட்டை, நடகோட்டை, மண்ணாடிமங்கலம், எலக்ட்ரிக் டவர், வாழைத்தோப்பு அருகில், கொடிமங்கலம் மற்றும் தாராப்பட்டி பிரிவு பகுதிகளிலுள்ள குழாய்களில் கசிவு ஏற்பட்டு, அதிக அளவில் குடிநீர் வீணாகி வருகிறது. இந்த பழுதுகளை சரிசெய்யும் பணிகள் ஜூன் 13-ம் தேதி முதல் 2 நாள்களுக்கு நடைபெற உள்ளது. எனவே, இந்த 2 நாள்களில் கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

 மண்டலம் எண். 1-ல் எச்எம்ஸ் காலனி மேல்நிலைத்தொட்டி குடிநீர் பகிர்மான பகுதிகள், அருள்தாஸ்புரம் மேல்நிலைத்தொட்டி குடிநீர் பகிர்மான பகுதிகளான வார்டு எண்.5,67,9,10,19,20-வது வார்டு பகுதிகள்.

 மண்டலம் எண் 2-ல் செல்லூர், ரேஸ்கோர்ஸ், ஏ.ஆர். டேங்க், புதூர் மருதங்குளம் மேல்நிலைத் தொட்டி, ராஜாஜி பூங்கா மேல்நிலைத் தொட்டி, அண்ணாநகர், கே.கே. நகர் மேல்நிலைத் தொட்டிகளின் பகிர்மான பகுதிகளான வார்டு எண். 27,33,34,35,36,37,38,39,40,41,42,43,44,45,46,47,48-வது வார்டு பகுதிகள். மண்டலம் எண் 3-ல் வில்லாபுரம் மேல்நிலைத்தொட்டி குடிநீர் பகிர்மான பகுதிகளான வார்டு எண். 61,62,63,64-வது வார்டுகள். மண்டலம் எண்.4-ல் சுந்தரராஜபுரம் மேல்நிலைத்தொட்டி குடிநீர் விநியோகப் பகுதிகளான 77,87,88,89,90,91,92,93-வது வார்டு பகுதிகள்.

 மேற்கண்ட பகுதிகளில் நாளை முதல் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.