Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழ்ப்பாக்கம் பகுதியில் குழாய் இணைக்கும் பணி: அண்ணாநகர் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் தடை ஏற்படும் சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி               21.06.2013

கீழ்ப்பாக்கம் பகுதியில் குழாய் இணைக்கும் பணி: அண்ணாநகர் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் தடை ஏற்படும் சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

குடிநீர் வாரிய பகுதி 8, அண்ணாநகரை சேர்ந்த செனாய்நகர், டி.பி.சத்திரம், அமைந்தகரை மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துவதற்காக டி.பி.சத்திரம் சாலை மற்றும் சிமெட்ரி சாலையில் புதிதாக போடப்பட்ட குழாய்களை கீழ்ப்பாக்கம் தோட்ட சாலையில் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் 22–ந்தேதி (நாளை) காலை 6 மணி வரை டி.பி.சத்திரம், செனாய் நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படலாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் குடிநீர் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் லாரிகள் மூலம் குடிநீர் பெற, 8–பகுதியாளர், 8144930908 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு டாக்டர் பி.சந்திரமோகன் கூறியுள்ளார்.