தினமலர் 27.06.2013
குடிநீர் பற்றாக்குறை: நகராட்சி நடவடிக்கை
திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சியில் குடி நீர் பற்றாக்குறையை சமாளிக்க லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். திண்டிவனம் நகராட்சியிக்கு புளிச்சப்பள்ளம், கண்ரக்கோட்டை, ரெட்டணை பகுதிகளில் இருந்து குழாய் மூலம் குடி நீர் வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், நேத்தாஜி நகர், சந்தைமேடு, பெருமாள் கோவில் தெரு, உள்பட பல இடங்களில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.போதுமான அளவு மேல் நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் வராததால் அருகிலுள்ள பகுதிக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீரின் அழுத்தம் குறைவால் மற்ற இடங்களில் குடி நீர் பைப்களில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் திண்டிவனம் பகுதியில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடி நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நகராட்சி நிர்வாகம் லாரிகளின் மூலம் மூன்று நாளைக்கு ஒரு முறை குடி நீர் வினியோகம் செய்து வருகின்றனர்.