Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர்-1 குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்: இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி               04.07.2013

பில்லூர்-1 குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்: இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பில்லூர்-1 குடிநீர் திட்டத்தின் கீழ் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வெள்ளமடை, கீரணத்தம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 4) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இப்பணிகள் முடிவுற்றதும் ஜூலை 5-ஆம் தேதி நீருந்துதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி நிறுவனங்களும், பொதுமக்களும், தங்கள் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்புக் கோட்ட (பில்லூர்) அலுவலகம் தெரிவித்துள்ளது.