பில்லூர்-1 குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்: இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Thursday, 04 July 2013 08:35
administrator
நாளிதழ்௧ள் -
குடீநீர் வழங்௧ல்
தினமணி 04.07.2013
பில்லூர்-1 குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள்: இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
பில்லூர்-1 குடிநீர் திட்டத்தின் கீழ் பராமரிப்புப்
பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வெள்ளமடை, கீரணத்தம் பகுதியில் வியாழக்கிழமை
(ஜூலை 4) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இப்பணிகள் முடிவுற்றதும் ஜூலை 5-ஆம் தேதி நீருந்துதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி நிறுவனங்களும், பொதுமக்களும், தங்கள் உள்ளூர் நீராதாரங்கள்
மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரியத்தின் பராமரிப்புக் கோட்ட (பில்லூர்) அலுவலகம்
தெரிவித்துள்ளது.