தினமணி 05.07.2013
இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் திருச்சி மாவட்டம் முத்தரச நல்லூர் தலைமை இடத்தில் மின்தடை மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நீரேற்றம் நிறுத்தப்படவுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) ஒரு நாள் மட்டும் காவிரி ஆற்றுக்குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.