Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடையாறு, தரமணியில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி                31.07.2013 

அடையாறு, தரமணியில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தரமணி, திருவான்மியூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.1) காலை 7 மணி முதல் சனிக்கிழமை (ஆக.3) காலை 7 மணி வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்து பள்ளிப்பட்டு வரை குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே வியாழக்கிழமை காலை 7 மணி முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை தரமணி, திருவான்மியூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படலாம். லாரி மூலம் குடிநீர் பெற 81449 30913, 044 - 24416341 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.