Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி                31.07.2013 

இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கடலூர் நகராட்சிப் பகுதியில் புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 இதுகுறித்து நகராட்சி ஆணையர் பா.காளிமுத்து கூறியது: கடலூர் நகருக்கு சப்ளை செய்யும் போர்வெல்கள் கேப்பர் மலை, திருவந்திபுரம் மலையடிவாரத்தில் உள்ளன. கேப்பர் மலையில் உள்ள துணைமின்நிலையத்தில் 30-ம் தேதி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதனால் குடிநீர் மோட்டார் இயக்க முடியாத நிலை உள்ளது.

 இதன்காரணமாக 31-ம் தேதி கடலூர் நகரில் குடிநீர் விநியோகம் இருக்காது. ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கம்போல் குடிநீர் விநியோகம் வழங்கப்படும்.