Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து

Print PDF

தினமணி           07.08.2013

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும்  பகுதிகளில் ஆக.7, 8 தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

  ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், திருச்சியில் உள்ள தலைமை நீரேற்று  நிலையம் மற்றும் ஒன்றாம் தொகுப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சிப் பகுதி, திருப்பத்தூர், காளையார்கோவில், கல்லல், இளையான்குடி, நெற்குப்பை ஆகிய ஊர்களில் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.