Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகரில்3 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்

Print PDF

தினமணி              16.08.2013

சேலம் மாநகரில்3 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக, மாநகராட்சி ஆணையர்

மா.அசோகன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட  செய்திக் குறிப்பு: 

சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மேட்டூர் - ஆத்தூர் குடிநீர் வழித் தடத்தில் குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்புப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மேற்கொள்கிறது. இதனால், சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு இந்த 3 நாள்களிலும் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.