Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் இருக்காது

Print PDF

தினமலர்            07.10.2013

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் இருக்காது

திருச்சி: கம்பரசம்பேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, நாளை திருச்சி மாநகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிக்கை:திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மரக்கடை, விறகு பேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், புதுஞூதூர் காஜாப்பேட்டை, கண்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கநகர், ஆல்ஃபாநகர், ஃபாத்திமா நகர், கருமண்டபம், காஜாமலை காலனி, அரியமங்கலம், மேலக்கல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, மத்திய சிறை, சுப்பிரமணியபுரம், விமான நிலையம், செம்பட்டு, கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான் நகர், அன்பு நகர், ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.,நகர், எல்.ஐ.சி., காலனி, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல்நகர், விஸ்வாஸ்நகர், ஆனந்த்நகர், சுப்பிரமணய நகர் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் இருக்காது. மறுநாள், 9ம் தேதி வழக்கம்போல குடிநீர் வரும்.