Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீதிகளில் குடிநீர் குழாய் மேயர் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன்         31.10.2013

வீதிகளில் குடிநீர் குழாய் மேயர் திறந்து வைத்தார்

அனுப்பர்பாளையம், : திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டு ஏவிபி லேஅவுட் பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.5லட்சம் நிதி ஒதுகீடு செய்து புதியஆழ்குழாய் கிணறு அமைத்து, மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் வைத்து, வீதிகளுக்கு குடிநீர் பைப் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் குழாய் இணைப்புகளை திருப்பூர்  மாநகராட்சி மேயர் விசாலாட்சி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், வேலம்பாளையம் முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி 10வது வார்டு கவுன்சிலர் ஈசுவரன், கருணாகரன், ராஜகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.