Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் குழாயில் உடைப்பு

Print PDF

தினமலர்          02.12.2013

குடிநீர் குழாயில் உடைப்பு

சிதம்பரம் : வ.உ.சி.தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் 5 வார்டுகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் நகராட்சியில் 19வது வார்டு முதல் 23வது வார்டு வரை உள்ள தெருக்களுக்கு மானா சந்து வாட்டர் டேங்கில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகம் குழாய் சரியாக பராமரிக்காததால், குடிநீர் செல்லும் குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வாடிக்கையாக இருந்து வருகிறது.

உடைந்த குழாயைச் சரியாக சீரமைக்காததால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக நகர மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வ.உ.சி தெருவில் குடிநீர் செல்லும் பிரதான குழாயில் திடீரென பழுது ஏற்பட்டு உடைந்து குடிநீர் ஆர்ட்டிஷியன் ஊற்று போல் வெளியேறி தெருக் களில் ஆறாக ஓடியது.

வ.உ.சி.தெருவில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லவில்லை. இதனால் 25க்கும் மேற்பட்டதெருக்களில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. வ.உ.சி. தெரு பகுதி மக்கள் பைப்பு உடைந்து தண்ணீர் வெளியேறிய இடத்தில் தண்ணீர் பிடிக்க குவிந்தனர்.

மானா சந்து வாட்டர் டேங் குடிநீர் விநியோகம் குழாய் சரியான முறையில் பராமரிக்காததால், இது போன்று அடிக்கடி பழுது ஏற்படுவதும், பழுது ஏற்பட்ட இடத்தின் மூலம் மழை நீர் மற்றும் கழிவு நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனால் நகர மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இதனை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.