தினகரன் 30.12.2013
சந்தப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் லாரிகள் மூலம் விநியோகம்
திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக வறட்சி காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் மட்டம் குறைந்ததால் ஆங்காங்கே குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் சாலைமறியல், பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து தேமுதிக வெங்கடேசன் எம்எல்ஏ திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதாக உத்தரவாதம் அளித்தார். அதன்படி திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தப்பேட்டையில் உள்ள 14, 15, 16, 17, 18 ஆகிய 5 வார்டுகளுக்கும் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிக சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்த குடிநீர் வினியோகம் செய்யும் பணியினை மாவ ட்ட துணை செயலாளர் உமாசங்கர், ஒன்றிய செயலா ளர் காமராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் ஆதன்ரவி, அஷ்ரப்அலி, சாசிஅழகிரி, வினோத், கபூர்கான், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.