தினமணி 06.01.2014
எடப்பாடியில் குடிநீர்த் தொட்டி திறப்பு
எடப்பாடி நகராட்சிப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டிகளை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
எடப்பாடி நகராட்சிப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடிநீர்த் தொட்டிகளின் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சி.ராமன், நகர மன்ற உறுப்பிணர் ரோகிணி, கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஈ.கே.செந்தில், ஆலச்சம்பாளையம் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.