Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு

Print PDF

தினத்தந்தி          29.01.2014 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து நேற்று கூட்டாய்வு நடைபெற்றது.

ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ராஜகோபால்நகர், சின்னகண்ணுபுரம், நிகிலேசன் நகர், ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் சரியாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் நேற்று காலையில் கூட்டாய்வு மேற்கொண்டனர். மில்லர்புரம் வீட்டு வசதி காலனி, ராஜகோபால்நகர், சின்னகண்ணுபுரம், நிகிலேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடந்தது.

நடவடிக்கை

மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக்குழுவினர் கோரம்பள்ளம் குளத்தையும் பார்வையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கோகிலா, மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.