Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காவிரி, ஆத்தூர் குடிநீரை சமமாக பகிர்ந்தளிக்க முடிவு

Print PDF

தினமலர் 24.12.2009

.காவிரி, ஆத்தூர் குடிநீரை சமமாக பகிர்ந்தளிக்க முடிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காவிரி, ஆத்தூர் குடிநீரை சமமாக பகிர்ந்தளிக்க வசதியாக பகிர்மான குழாய்களில் மாற்றம் செய்யப்பட உள் ளது. திண்டுக்கல் நகராட்சிக்கு ஆத்தூர் குடிநீர் திட்டத்தில் இருந்தும், காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்தும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. காவிரி நீரில் சுவை குறைவாக இருப்பதாகவும், ஆத்தூர் நீர் சுவை மிகுந்ததாக உள்ளதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் நகரில் சில பகுதிகளுக்கு மட்டும் ஆத்தூர் குடிநீரும், பல பகுதிகளுக்கு காவிரி குடிநீரும் சப்ளையாகிறது. இதனால் அனைத்து பகுதி மக்களும் தங்களுக்கும் ஆத்தூர் குடிநீர் தேவை. காவிரி குடிநீர் தேவையில்லை என மனு கொடுத்து வருகின்றனர். இந்த பிரச்னையை சரி செய்ய அனைத்து பகுதிகளுக்கும் ஆத்தூர், காவிரி நீரை மாறி, மாறி சப்ளை செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்துடன் கலந்து ஆலோசனை செய்து, பகிர்மான குழாய்களிலும் வால்வுகளிலும் மாற்றம் செய்ய முடிவு செய்துள் ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் போது நகர் முழுவதும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையாகும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 24 December 2009 09:45