தினமணி 31.12.2009
உசிலம்பட்டியில் ரூ.3 லட்சத்தில் புதிய கட்டடம், குடிநீர்த் தொட்டி திறப்பு
உசிலம்பட்டி, டிச. 29: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கவணம்பட்டியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டடம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குடிநீர்த் தொட்டியையும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. இ.மகேந்திரன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து இவை கட்டப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த நகரச்செயலாளர் பூமா ராஜா. ஒன்றியச் செயலாளர் அன்பு கே.சி.மாயன், அம்மா பேரவைத் தலைவர் ராஜேந்திரன், நகரசபை கவுன்சிலர்கள் சசிகலா போஸ், பாலகருப்பு, பொதுக்குழு உறுப்பினர் குலசேகர பாண்டி, வழக்கறிஞர் லட்சுமணன், சேதுராமன், நகராட்சி ஆணையாளர் அட்சயா, பொறியாளர் சரவணன், பில்டிங் ஆய்வாளர் செல்லபாண்டி, ஓவர்சீயர் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.