தினமலர் 28.01.2010
குடந்தை நகராட்சியில் 30ம்தேதி குடிநீர் நிறுத்தம்
கும்பகோணம் : கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் வரும் 30ம் தேதி குடிநீர் வழங்கல் நிறுத்தி வைக்கப்படுகிறது. கும்பகோணம் நகராட்சி நிர்வாகத்தில் கொட்டையூர் முதல் மேம்பாலத்தின் தெற்கு பகுதி வரையிலும், பேட்டை தெரு முதல் ஸ்ரீநகர் காலனி வரையிலும் என மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. அதில் சுமார் 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் அன்றாட குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுஉள்ள நீர் சேமிப்பு கிணறு (கலெக்டர் வெல்) மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. அங்கிருந்து நகரில் உள்ள பத்துக்கும் அதிகமான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் சேகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
அந்நிலையில் வரும் 30ம் தேதி பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியிருப்பதால் குடிநீர் வினியோகம் நடைபெறாது என நகராட்சி ஆணையர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.